142 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்!


 எதிர்வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, செபி சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு, காவி உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிதி அளித்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டமான கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கின.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றிற்கு உதவும் வகையில் இலவசமாக தடுப்பு மருந்துகளை அளிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இதனடிப்படையிலேயே எதிர்வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பிவைக்கவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, பெப்ரவரி மார்ச் மாதங்களிலும் ஏப்ரல், மே மாதங்களில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கானா மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காங்கோ, கம்போடியா, அங்கோலா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் 1.2 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பு மருந்துகளை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.