நீரில் மூழ்கி இருவர் பலி!


 மாவனெல்லை, போவெல்ல பகுதியில் நீராட சென்ற 7 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (21) மாலை 3.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 பேர் அடங்கிய குழுவொன்று மாவனெல்லை, போவெல்ல பகுதியிலுள்ள மாஓயாவில் நீராட சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது 7 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 24 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.