தூக்கக்கலக்கத்தால் பறிபோனது சிறுமியின் உயிர்!


இராஜாங்கனை பிரதேசத்தில் தந்தையின் தூக்கக்கலக்கத்தால் மகிழுந்து ஒன்று கால்வாயொன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயதான சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்தின்போது, குறித்த வாகனத்தினுள் 5 பேர் இருந்துள்ளதாகவும்,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்மார் மூவர் பெலிஅத்த பிரதேசத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இக்குடும்பத்தின் இளைய மகளே பலியாகியுள்ளார், சாரதியான தந்தைக்கு நித்திரை கலக்கமே இந்த விபத்து ஏற்பட காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.