விமானத்தில் பயணிப்போருக்கான எச்சரிக்கை!
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், பயணங்களின் போது சில விமானப் பயணிகள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பொருட்படுத்தாமலும் இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமுறை அறிவுறுத்திய பிறகும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப் படமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட பிறகு அலட்சியமாக இருக்கும் பயணிகள், அத்துமீறுபவர்களாக கருதப்பட்டு, அதன்பின்னர் விமான பயணத்திற்கு தகுதி அற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை