குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடுகள்!
தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக இன்றும் (சனிக்கிழமை) சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
பௌத்த தகவல் மையத்தின் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜினானந்த தேரர் மற்றும் தேசிய முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் ஆகியோரே இவ்வாறு தங்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
முஸ்லிம் சட்டம் தொடர்பில் அண்மையில் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை