இலங்கைக்கு நன்றி தெரிவித்த அதானி!


கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கு தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கு இந்தியாவின் அதானி குழு உரிமையாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றிடம் இருந்து கடிதமொன்றை பெற்றுள்ளதாகவும் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி , கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய ஒப்பந்தத்தில் 51 வீதமான பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.

இதன்படி, அரச மற்றும் தனியார் திட்டமாக 35 வருட காலத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில் கொள்கலன்களை கையாளும் திறன் அதிகரிக்குமென அதானி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் 51 வீத பங்குகளை தாம் பெறவுள்ளதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.