மட்டக்களப்பு தேவாலயங்களில் இராணுவத்தினர் குவிப்பு!


மட்டக்களப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவத்தினர் நேற்று முதல் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்வரும் 2ம் திகதி கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வெள்ளிக்கிழமை ஆகும்.

இந்த நாள் கிறிஸ்தவர்களுக்கு விசேட நாள் என்பதுடன் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறும்.

அத்தோடு இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள தேவாலயங்களில் இராணுவத்;தினர். தொடர்ந்து இரவு பகலாக தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.