கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!


கொழும்பில் கடந்த சில வாரங்களாக பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தெரிவு செய்யப்பட்ட பொதுப் பகுதிகளில் எழுமாறான பிசிஆர் மற்றும் அன்டிஜன் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தார்.

எனினும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே தற்போது கொரோனா நோயாளர்களாக அடையாம் காணப்படுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.

பெப்ரவரி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு நகரம் முழுவதும் நடத்தப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் சோதனைகளின் எண்ணிக்கை, தடுப்பூசிகள் செலுத்துவதற்கு தொடங்குவதற்கு முன்னர் நடத்தப்பட்டதைவிட குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் சோதனை நடந்துகொண்டிருப்பதாக கூறிய அவர், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில், ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்ட உடனேயே முதல் தொடர்புகள் குறித்து பரிசோதிக்கப்படுவதாகவும் பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகள் குறித்து பரிசோதிக்கப்படுவதாகவும் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.