இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!


இந்தியாவில் கடந்த 85 நாட்களாக இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 26,291 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ள நிலையில் , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,85,339ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 118 பேர் உயிழந்துள்ள நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,58,725ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக கொரோனாவால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 20 அன்று டெல்லியில் அதிகபட்சமாக 26,624 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று 26,291 பேர் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்களின்படி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 3,29,47,432 ஆக உள்ளது.

மேலும் இந்தியா உலக அளவில் கொரோனா தொற்றில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.