இளம் குடும்பஸ்தர் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு!


மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளதுடன் 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

வீடொன்றில் சுவரை இடித்து வேலை செய்து கொண்டிருந்த போது, வீட்டின் சுவர் முற்றாக இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரம் மீட்கப்பட்டு பள்ளமடு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். எனினும் அதில் ஒருவரான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது சகோதரன் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இதுகுறித்த மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.