இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!





நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவராத்திரி நிழ்கவிற்காக திருக்கேதீஸ்வரம் சென்று சுற்றுலா பயணத்தை நிறைவு செய்து மதியம் நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்கள் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பிளான் வடக்கை சேர்ந்த சிவச்சந்திரன் சிந்துஜன் (வயது 21) மற்றும் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாவும் புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கௌதமன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிந்துஜன் வயாவிளான் மத்திய கல்லூரியும், கௌதமன்  ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர்கள் ஆவார். எனத் தெரியவந்துள்ளது.





Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.