பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார் பழனிசாமி!


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்காக இன்று மதியம் 1.45 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் அவர் செல்கிறார். மாலை 5.30 மணிக்கு ஏற்காடு தொகுதி வாழப்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.சித்ராவை  ஆதரித்து பேசவுள்ளார்.

பின்னர்  கெங்கவல்லி தொகுதி தம்மம்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.நல்லதம்பிக்கு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.ஜெயசங்கரனுக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் இரவு சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.

தொடர்ந்து நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது சுற்றுப்பயணம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.