இந்தியாவின் கொரோனா நிலைவரம்!
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 56 ஆயிரத்து 119 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சத்து 95 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் நேற்று ஒரேநாளில் 266 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் ஒரு கோடியே 13 இலட்சத்து 90 ஆயிரத்து 829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 5 இலட்சத்திற்கு மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை