இந்தியாவின் சுதந்திர தினவிழாவை ஆரம்பித்து வைக்கும் மோடி!


இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினவிழாவின் துவக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேற்படி விழாவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் “அம்ரித் மகோத்சவ்” என்ற பெயரில் கொண்டாடப்படவுள்ளது. 75-வது சுதந்திர தினம் 2022ல் கொண்டாடப்பட உள்ளது.

நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. அதைத் தவிர சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு 21 நாட்கள் நடை பயண இயக்கத்தையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கிறார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.