இந்திய நிறுவனங்களை உலகளவில் போட்டியிட உருவாக்குவதே நோக்கம்!


உலகளவில் போட்டியிடும் வகையில் இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதற்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் வாகனம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளித் தொடர்பாடல் ஊடான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உற்பத்தியின் அளவையும் வேகத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது அதற்கேற்றாற்போல் வேலைவாய்ப்பும் அதிகரிக்கின்ற நிலையில், தொழில் நடத்துவதற்கு உகந்த சூழலை அரசு உருவாக்குவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வாகனத் தொழில், மருந்து உற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி, உருக்கு, துணி, உணவுப் பதப்படுத்தல் உள்ளிட்ட 13 பிரிவுகள் உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்புத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.