யாழில் திருமண வீட்டிற்கு சென்ற பெண் பலி!


யாழ்.நாவாந்துறை பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற பெண் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்.உடவிலை சேர்ந்த பெண் ஒருவர் நாவாந்துறையில் திருமண வீட்டிற்கு வந்துள்ளார்.

திருமண வீட்டிற்கு வந்த பெண் யாழ்.நகரிலிருந்து 15 வயதான சிறுவனுடன் துவிச்சக்கர வண்டியில் நாவாந் துறை சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவனும்,உயிரிழந்த பெண்ணும் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நிலையில் தடுக்கி விழுந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த சு.நிமலினி (வயது 42) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.