ஆபத்தில் சிக்கியுள்ள யாழ்ப்பாணம்!
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி இன்று மட்டும் 11 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் சிறையில் இருந்து விடுதலையான 3 பேருக்கும், பருத்தித்துறை மற்றும் யாழ் மாநகர பகுதியில் தலா மூவருக்கும், சங்கானையில் 4 பேருக்கும், அச்சுவேலியில் ஒருவருக்கும் என யாழ்ப்பாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அபாயம் தொடர்ந்தும் நிலவுவதால் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை