விரைவில் ஆரம்பமாகும் காங்கேசன்துறை – காரைக்கால் படகுச் சேவை!


யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து புதுச்சேரி அருகிலுள்ள காரைக்கால் இடையேயான படகுச் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், காங்கேசன்துறை – காரைக்கல் படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்பினை மேம்படுத்துவதில் இந்தியா ஆர்வமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல நூற்றாண்டுகள் பழமையான படகுச் சேவைகளை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலா மற்றும் சிறிய அளவிலான வர்த்தகத்தை இரு வழிகளிலும் எளிதாக்குவதற்கும், இரு நாட்டு மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதியான வழியாகவே இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, காங்கேசன்துறைத் துறைமுகத்தை இந்தியாவின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் இந்தியாவுடனான திட்டமிடப்பட்ட விமானங்களுக்காக இலங்கை தனது வான்வெளியை மீண்டும் திறக்கும்போது, பலாலிக்கான விமான சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு – தூத்துக்குடி இடையில் ஒரு இணைப்புக்கான வாய்ப்பும் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.