இந்திய மீனவர்கள் இரணைத்தீவுக் கடற்பகுதியில் 20 பேர் கைது!


கிளிநொச்சி மாவட்டம் பூநகரி – இரணைத்தீவுக் கடற்பகுதியில் வைத்து 20 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு றோலர் படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த இந்திய மீனர்வர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறு நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டிருந்த நிலையி்லுயே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதாகியுள்ள மீனவர்கள் இன்று கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்படவுள்ள அதேவேளை, அரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.