‘நீர்ப்பாசனச் செழிப்பு’ திட்டம் மடு பகுதியில் ஆரம்பித்துவைப்பு!


‘நீர்ப்பாசனச் செழிப்பு’ என்ற கிராமிய குளங்கள் புனரமைப்புத் திட்டம் மன்னார், மடு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கிய கொள்கையின் கீழ், நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தில் ஐயாயிரம் கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

இதன்படி, மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமேல், மடுப் பிரதேச செயலாளர், மத்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர், விவசாய உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டத்திற்காக சுமார் 8.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத் திட்டத்தின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வேலைத் திட்டத்தை காதர் மஸ்தான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.