சாணக்கியன் மாவையை சந்திக்க முயற்சி!


யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த எம்.ஏ.சுமந்திரன் அணியின் கூட்டத்தை சி.சிறிதரன் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் மேற்கொண்ட இந்த நகர்வுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

கட்சி தலைமைக்கு தெரியாமல் நடக்கும் எம்.ஏ.சுமந்திரன்- சாணக்கியன் தரப்பினரின் கூட்டமென்பதால், கரவெட்டியில் இரண்டு கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சட்ட மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் கூட்டமென தெரிவித்து, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரால் யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் கூட்டமொன்று இடம்பெற்ற நிலையில் இது எம்.ஏ.சுமந்திரன் அணியின் கூட்டமென ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

வரும் மாகாணசபை தேர்தலை இலக்கு வைத்தும், கட்சிக்குள் தம்மை பலப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடிவடிக்கை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு நிகழ்விற்கான தகவல் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என்பதில் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் உறுதியாக இருந்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை பொதுத்தேர்தலின் முன்னரும் இப்படியாக கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும நடவடிக்கையை எம்.ஏ.சுமந்திரன் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தின் ஏற்பாட்டில், மாவை சேனாதிராசா அழைக்கப்படாததை, இன்னொரு பேச்சாளராக குறிப்பிடப்பட்டிருந்த சி.சிறிதரன் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன் என்றும் , தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டேன் எனவும் அவர் தெரிவித்ததாக அறிய முடிகிறது.

இலங்கை வேந்தன் கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு முன்னதாக, கரவெட்டியில் இரண்டு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதன்படி புலவாஓடை, கரவெட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும், கட்சி தலைமைக்கு தெரியாமல் தலைமைக்கு சவால் விடுத்து சுமந்திரன், சாணக்கியன் தரப்பு செயற்படுவதாக தகவல் வெளியானதையடுத்து- அந்த கூட்டங்களை பிரதேச ஏற்பாட்டாளர்கள் செய்ய மறுத்து விட்டனர்.

இதன் காரனமாக , இறுதி நேரத்தில் குறித்த கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கட்சி தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளிற்கு துணைபோவதாக இரா.சாணக்கியனிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன் கட்சியின் கிழக்கு பிரதிநிதிகள் பலர், தொலைபேசி வழியாக சாணக்கியனிற்கு தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மஹிந்த தரப்பின் செல்லப்பிள்ளையாக இருந்த சாணக்கியனை தமிழ் அரசு கட்சிக்கு கொண்டு வருவதில் மாவை சேனாதிராசாவின் முக்கிய பங்களிப்பும் இருந்தது. எனினும், தேர்தலின் பின்னர் வடக்கிற்கு வந்த சாணக்கியன் 3 நாட்களாக வடக்கில் தங்கியிருந்தும், மாவை சேனாதிராசாவை சந்திக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றைய சர்ச்சையை தொடர்ந்து இன்று மாவை சேனாதிராசாவை திடீரென சந்திக்கும் முயற்சியில் சாணக்கியன் இறங்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.