தனிமைப்படுத்தலில் நாமல் ராஜபக்ச!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, டுபாயில் இருந்து நாடு திரும்பவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக  உபுல் ரோஹன மேலும் கூறியுள்ளதாவது, அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்வதன் ஊடாக, ஏனையோருக்கு முனமாதிரியாக செயற்பட முடியும்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் அனைவரும் ஹோட்டல்கள் அல்லது இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது அரசாங்கத்தின் நடைமுறையாகும்.

அந்தவகையில் இவ்வாறான நடைமுறைகளை அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டியது அவசிமாகும் மாறாக விதிமுறைகளை மீறி செயற்பட முயற்சித்தால், பொது மக்கள் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.