வலையிறவு மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை புனரமைப்பு!


இலங்கையின் விமானப்படையின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வலையிறவு மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை கட்டிடமும் பாடசாலை வளாகமும் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இலங்கையின் விமானப்படையின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு விமானப்படையினால் இவை புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டன.

இதன் திறப்பு விழா பாடசாலை அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு விமானப்படையின் குரூப் கப்டனர் ஜி.பி.எச்.நிலந்த பியசேன உட்பட விமானப்படை அதிகாரிகள்,பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது புனரமைக்கப்பட்ட பாடசாலை வகுப்பறைக்கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டதுடன் விமானப்படையினால் அழகுபடுத்தப்பட்ட பாடசாலை வளாகத்தில் இலங்கையின் விமானப்படையின் 70வது ஆண்டு பூர்த்தியை குறிக்கும் வகையில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் பெற்றோர்,மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.