அடுத்த செவ்வாய் இலங்கை தொடர்பான தீர்மானம் தாக்கல்!


இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரித்தானியா தலைமையிலான உறுப்பு நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக பேரவையில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் குறித்த பிரேரணை மீது வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயர் வட்டார தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்தியா தனது ஆதரவை இதுவரை தெரிவிக்கவில்லை என்பதுடன், 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த, இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 15 நாடுகள் தீர்மானத்தை நகர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை அரசாங்கதிற்கு விடுக்கப்படும்.

அத்தோடு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் சுயாதீன செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் குறித்த தீர்மானம் அரசாங்கத்தை கோரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.