இந்திய பிரதமர் மோடிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கலந்துரையாடல்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

தொலைபேசி ஊடாக இன்று (சனிக்கிழமை) பிற்பகல், இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்திப் பணிகள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், கொவிட்-19 தொற்று காரணமாக எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கையில், இலங்கைக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.