பெரும் அச்சத்தில் இலங்கை சிறுபான்மை!


தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என கோட்டாபய அரசாங்கத்தின் அறிவிப்பால் சிறுபான்மை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தடைக்கான காரணம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர, அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கதின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.