ஜெருசலேம் தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக அறிவிப்பு!


இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலின் மையத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய நகரத்தில் தூதரகத்தை நிறுவிய முதல் ஐரோப்பிய நாடாக தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ மாறியுள்ளது.

ஜெருசலேமில் உள்ள தனது தூதரகத்தை முறையாக திறந்து விட்டதாக கொசோவோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதும், செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொசோவோ-செர்பியா உச்சிமாநாட்டின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

கொசோவோ ஜெருசலேமில் தனது தூதரகத்தை நிறுவுவதில் அமெரிக்கா மற்றும் குவாத்தமாலாவைப் பின்பற்றுகிறது.

பிரதமர் அவ்துல்லா ஹோதி செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் செர்பிய ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வுசிக்கை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சந்தித்தபோது கொசோவோவின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.