தாய்லாந்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி திட்டம்!
தாய்லாந்தில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா, அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
எனினும், நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆஸ்திரியா, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்குஇரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை