தப்பியோடிய பாரவூர்தியின் சாரதி கைது!


லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

குறித்த விபத்து இடம்பெற்றதை அடுத்து, விபத்துக்குள்ளான பேருந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றிருந்தார்.இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.