தப்பியோடிய பாரவூர்தியின் சாரதி கைது!
லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.
குறித்த விபத்து இடம்பெற்றதை அடுத்து, விபத்துக்குள்ளான பேருந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றிருந்தார்.இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை