பயணி ஒருவர் செய்த மோசமான செயல்!!

 


திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பேருந்தில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட நிலையில் பயணிகள் அவரை பிடித்து கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,


திருகோணமலையிலிருந்து நேற்று (21) மாலை 4.00 மணிக்குச் கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்தில் நான்காம் கட்டையிலிருந்து ஏறிய நபர் பஸ்ஸில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய வேளை மற்றொருவர் அதனை கண்டு கூக்குரலிட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.



இதேவேளை சந்தேக நபர் தொடர்பில் திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் போன்ற பொலிஸ் நிலையங்களில் ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.