மரத்தனில் தங்கத்தை வென்ற வீரர்கள்
46 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான மரத்தன் போட்டி இன்று காலை கதிர்காமத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மத்திய மாகாணம் தங்கப்பதக்கத்தை வென்றது.
இதில் ஆண்கள் பிரிவில் சம்பயின்ஷிப்பை எம்.எஸ். சிவராஜன் வென்ற அதேவேளை பெண்கள் பிரிவில் வேலு கிருஷாந்தினி தங்கப்பதக்கத்தை வென்றார்.
கதிர்காமம் பிரதான பேரூந்து நிலையத்தின் அருகே ஆரம்பமான தேசிய விளையாட்டு விழாவுக்கான பகிரங்க மரத்தன் போட்டியில் அகில இலங்கை ரீதியாக 72 விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
இதில் 50 வீரர்கள் மற்றும் 22 பெண் வீராங்கனைகள் அடங்குவர். பந்தயத்தின் மொத்த தூரம் 42.195 கிலோ மீற்றர்களாகும்.
இதில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாண வீரர் எம்.எஸ். சிவராஜன் பந்தயத் தூரத்தை 2.29.29 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இரண்டாமிடத்தை மேல்மாகாண வீரர் ஜி.கே.கே.எஸ்.டி. குணசேகர வென்றார். மூன்றாம் இடத்தை வடமேற்கு மாகாணத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம்.எஸ்.குமார வென்றார்.
அதேவேளை மகளிர் மரத்தன் போட்டியில் மத்திய மாகாண வீராங்கனையான வேலு கிருஷாந்தனி தங்கப்பதக்கத்தை வென்று சம்பியனானார்.
இவர் பந்தயத் தூரத்தை 2.55.30 செக்கன்களில் ஓடி முடித்தார். இதில் இரண்டாமித்தை மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எச்.எம்.டபிள்யூ.ஜி.எம்.ஹெராத் வென்றதோடு மூன்றாமிடத்தை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஏ.எல்.எஸ்.டி லியானகே வென்றார்.
வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களோடு பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை