மரத்தனில் தங்­கத்தை வென்­ற வீரர்கள்


 46 ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான மரத்தன் போட்டி இன்று காலை கதிர்­கா­மத்தில் நடை­பெற்­றது.

இந்தப் போட்­டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரி­வு­க­ளிலும் மத்­திய மாகாணம் தங்­கப்­ப­தக்­கத்தை வென்­றது.

இதில் ஆண்கள் பிரிவில் சம்­ப­யின்­ஷிப்பை எம்.எஸ். சிவ­ராஜன் வென்ற அதே­வேளை பெண்கள் பிரிவில் வேலு கிரு­ஷாந்­தினி தங்­கப்­ப­தக்­கத்தை வென்றார்.

கதிர்­காமம் பிர­தான பேரூந்து நிலை­யத்தின் அருகே ஆரம்­ப­மான தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான பகி­ரங்க மரத்தன் போட்­டியில் அகில இலங்கை ரீதி­யாக 72 விளை­யாட்டு வீர வீராங்­க­னைகள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதில் 50 வீரர்கள் மற்றும் 22 பெண் வீராங்­க­னைகள் அடங்­குவர். பந்­த­யத்தின் மொத்த தூரம் 42.195 கிலோ மீற்­றர்­க­ளாகும்.

 

இதில் ஆண்கள் பிரிவில் மத்­திய மாகாண வீரர் எம்.எஸ். சிவ­ராஜன் பந்­தயத் தூரத்தை 2.29.29 செக்­கன்­களில் நிறைவு செய்து முத­லி­டத்தைப் பிடித்து தங்­கப்­ப­தக்­கத்தை வென்றார்.

இரண்­டா­மி­டத்தை மேல்­மா­காண வீரர் ஜி.கே.கே.எஸ்.டி. குண­சே­கர வென்றார். மூன்றாம் இடத்தை வட­மேற்கு மாகா­ணத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம்.எஸ்.குமார வென்றார்.

அதே­வேளை மகளிர் மரத்தன் போட்­டியில் மத்­திய மாகாண வீராங்­க­னை­யான வேலு கிரு­ஷாந்­தனி தங்­கப்­ப­த­க்கத்தை வென்று சம்­பி­ய­னானார்.

இவர் பந்­தயத் தூரத்தை 2.55.30 செக்­கன்­களில் ஓடி முடித்தார். இதில் இரண்­டா­மித்தை மத்­திய மாகா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எச்.எம்.டபிள்யூ.ஜி.எம்.ஹெராத் வென்­ற­தோ­டு ­மூன்­றா­மி­டத்தை சப்­ர­க­முவ மாகா­ணத்தைச் சேர்ந்த ஏ.எல்.எஸ்.டி லியா­னகே வென்றார்.

வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களோடு பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.