தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதிக்கு அனுமதி வழங்க கூடாது!


தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய தனிநபர்களை அனுமதிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு கூறினார்.

சமீபத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெய் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர், நுகர்வுக்கு ஏற்ற எண்ணையை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எனவே இவ்வாறு தரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து பின்னர் சந்தைக்கு வழங்குவதற்கான அனுமதியை வழங்க கூடாது என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.