மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவித்தலை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் அனுப்பிவைத்துள்ளது.
இதன்படி பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் ஒன்றுக்கூடுவதை தவிர்க்குமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இனிவரும் காலங்கள் பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை