நீயெனும் நிறைதல் - கவிதை!!
சிலந்திவலை விரிவுகளில்
தேங்கியிருக்கும் இருண்மையை
பார்வையொன்றில்
உயிர்ச்சலனமெங்கும்
கட்டுடைக்கும் நெகிழ்வை
தந்து நிறைகிறாய்.....
உனது கரைப்படிவுகளில் எனதாழ
ஊற்றுக்கள்
முழுமைக்கும்
கருமை என்பது துல்லிய
உருவெளி விதிர்ப்புகள்....
அசைவிழந்த காடுகளில்
மாயக்கணமொன்று படிந்து
நிறையுமொரு நீள்தல்...
கத்தி நுனி விரல் தடவும்
தளர்வு...
புலர்வென சாய்தலென
ஆன்மம் தேடும் அதீதம்
விழி செந்நிறம் கொள்கையில்
மழை விழுந்த நிலமேகும்
காளான் என நிரைத்து திரள்கிறது
ஓசையற்ற முதல் பறவை..
அன்பே........
மனஆழ நுழைவுகள்
அவ்வளவு எளிதில்
சாத்தியப்படாது...
முடிவில்லாது பெருகிச் செறிந்து
இரவு உதிர்ந்து கொண்டிருக்கிறது
கயூரி புவிராசா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை