'கர்ணன்' படத்தில் பாடிய பிரபல இசையமைப்பாளர்!!

 


தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கர்ணன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற மாரியம்மாள் பாடிய பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் சற்றுமுன் இரண்டாவது பாடலான ‘பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியாகி உள்ளது.


சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் ரீத்தா இணைந்து பாடியுள்ளனர்.


என் ஆளு பண்டாரத்தி

எடுப்பான செம்பருத்தி

கண்ணால என்னை கொத்தி

கலங்கடித்த சக்களத்தி


என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும், இந்த பாடலும் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் போலவே சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.