காத்திருப்பு - கவிதை!!
காத்திருத்தலின்
பெரும் அவஸ்தையால்
இதை எழுதுகிறேன்.....
காத்திருப்பு என்பது
ஒரு முழுமையில்லாத மரணம்.
காத்திருப்பு என்பது
நரகத்தின் வாசலில்
மண்டியிட்டுக் கிடப்பது.
ஒரு துளி தேனுக்காய்
ஒரு கோப்பை விஷத்தை
குடிப்பது.
என்னை கேட்டால்....
ஏதோ ஒரு காரியத்துக்காக
யாரோ ஒருவருக்காக
காத்திருப்பதைவிட
(அது யாராவேணா இருக்கட்டும்)
தண்டவாளத்தில் தலையை வைத்து
மொத்தமாய் இறந்துவிடலாம்.
ஆதலால்
நீங்க யாரையாவது
காத்திருக்க வைப்பீர்களானால்....
தயை கூர்ந்து
அவர்கள்மீது பெருங்கருணைகொண்டு
இறந்துவிடச் சொல்லிவிடுங்கள்.
காத்திருத்தலின்
பெரும் அவஸ்தையால்
இதை எழுதுகிறேன்.....
காத்திருத்தல்
மரணத்தைவிட கொடியது.
நட்சத்திரப்பாடகன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை