யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதியாக செல்வம் கண்ணதாசன் தெரிவு!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் பல்கலைக்கழகப் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் பி.ரவிராஜன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் இடம்பெற்ற உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி தெரிவில் பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் முன்னிலை பெற்றுத் தெரிவாகியுள்ளார்.

இதுவரை காலமும் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதியாக விளங்கிய பேராசிரியர் கு.மிகுந்தனின் பதவிக் காலம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

அதன்பின்னர், உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு, ஒருவர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில் மீள் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கமைய மூவர் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதன்படி, விண்ணப்பித்திருந்த மூவரும் இன்று பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தமது எதிர்கால நோக்கு தொடர்பாக விளக்கமளித்ததைத் தொடர்ந்து, தெரிவு இடம்பெற்ற நிலையில் 26 வாக்குகளுடன் பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் முன்னிலை பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.