கனடாவில் 24 மணித்தியாலத்தில் 33பேர் பலி!


 கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 82ஆயிரத்து 116பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 959பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 47ஆயிரத்து 864பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை ஒன்பது இலட்சத்து 11ஆயிரத்து 293பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.