ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலைக்கு கிடைத்தது தீர்ப்பு!
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜோர்ஜ் ப்ளொய்ட் கொல்லப்பட்ட வழக்கில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜோர்ஜ் ப்ளொய்ட் வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குறித்த வழக்கை விசாரணை செய்வதற்காக 12 நீதிபதிகள் அடங்கிய குழாம், ஃப்ளாயிட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றில் கொடூரமான நிகழ்வு என்று குறிப்பிட்டது.
பின்னர் 45 சாட்சியங்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோர்ஜ் ப்ளொய்ட் வழக்கில் டெரிக் சாவின் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து டெரிக்கின் பிணை மனுவையும் நீதிபதிகள் இரத்துச் செய்தனர்.
அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜ் ப்ளொய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை