கமலாம்பிகை அஷ்டகம்


அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு பலவற்றை தருகிறது இயற்கை. எனவே தான் அந்த இயற்கையை இயற்கை தாய் என பலரும் அழைக்கின்றனர். பெண் தெய்வங்களை வழிபடுபவர்களும், அந்த தெய்வங்களை தங்களின் தாயாக கருதுகின்றனர்.


அதேபோல் அந்த தெய்வங்களும் தனது குழந்தைகளாக எண்ணி பக்தர்களுக்கு அனைத்தையும் வழங்குகின்றனர்.

அப்படித் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் வழங்கும் தெய்வமாக கமலாம்பிகை தேவி இருக்கிறாள். அந்த தேவிக்குரிய “கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்” இதோ.



கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம் ப்ருந்தார கைர்வந்திதாம் மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம் மந்தஸ்மிதாம் ஸுந்தரீம் - பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம் போகாபவர் கப்ரதாம் வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம் வாஞ்சானுகூலாம் ஸிவாம்

அம்பிகையின் ஒரு வடிவமாக இருக்கும் கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது இந்த அஷ்டகத்தை தினமும் காலை மற்றும் மாலையில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வருவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, அம்பிகையின் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.