விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!


கித்துல்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகொவுத்தென் கம்பி பாலத்திற்கு அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டயகம பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் எட்டியாந்தோட்டை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே வாகன விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம முதலாம் பிரிவைச் சேர்ந்த அதிர்ஷ்டநாதன் கோபிநாதன் (வயது – 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.