முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்து - தந்தை பலி!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதி தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மகன் பாடுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

விபத்தில் சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த வள்ளிபுனம் ஜெயரசா (53) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சரதியும் புதுக்குடியிருப்பு பொலீசரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்குறித்தான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.