வங்கியில் 136 மில்லியன் ரூபாய் வைப்பு செய்த இளைஞன் கைது!


மொறட்டுவ பகுதியில் சுமார் 136 மில்லியன் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பு செய்த 27 வயதான இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர் தர்மசிறி பெரேராவுக்கு சொந்தமான பணமே இவ்வாறு இளைஞரின் வங்கிகணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் பல்வேறு குற்றச் செயற்பாடுகளை செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தர்மசிறி பெரேரா என்ற சந்தேக நபருக்கு சொந்தமான பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.