இலவசமாக 224 பேருக்கு காணி வழங்கிய நபர்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு 15 ஏக்கர் காணியினை இலவசமாக வழங்கிய நபர் ஒருவர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எத்தலை மேட்டுக்காடு எனும் இடத்தில் இந் நிகழ்வு சித்திரை புத்தாண்டு தினமான நேற்று வைபவ ரீதியாக பயனாளிகளுக்கு காணி உறுதி ஆவணம் வழங்கி வைக்கப்பட்டது.

கிரானிலுள்ள சமூக ஆர்வலரான குருசுமுத்து வி.லவக்குமார் என்பவரே தமக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் காணியினை 224 பேருக்கு இவ்வாறு இலவசமாக வழங்கி வைத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் வறுமமை நிலையில் வாழும்,வாடகை வீட்டில் உள்ளோர்.மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தோர் என அடையாளம் காணப்பட்டு அவர்களின் எதிர்கால வாழ்வு கருதி இவ் காணி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

பயணாளிகளின் பிள்ளைகளின் கல்வி, மேம்பாடு,பொருளாதாரம் விருத்தி கருதி இவ் நடவடிக்கையை முன்னெடுத்ததாக நன்கொடையாளர் வி.லவக்குமார் தெரிவித்தார். இதில் பொது தேவைகளான மத ஆலயம்,பாடசாலை,போன்றவற்றிக்கும் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் குடியிருப்பாளர்களின் எதிர்கால தேவை, வாழ்வாதாரத்தினை நிவர்த்தி செய்ய சிறுதோட்டப் பயிர் செய்கை நடவடிக்கைக்காக குத்தகை அடிப்படையில் மேலும் 15 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் அருட்தந்தை நியூட்டன் அடிகளார்,சகலமத ஜயப்பன் யாத்திரை குழு குருசாமி சாம்பசிவம் புனிதாபரன் மற்றும் இளைப்பாறிய மரமுந்திரிகை கூட்டுத்தாபன முகாமையாளர் டி.நிதர்சன் ஆகியோர்கள் அதிதிகாளாக கலந்து கொண்டதுடன் காணி வழங்குனருக்கு தமது வாழ்த்தையும் பாராட்டினையும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.