கனடாவில் தொற்றினால் 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!


கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 23ஆயிரத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 87ஆயிரத்து 918பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 802பேர் பாதிக்கப்பட்டதோடு 43பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 49ஆயிரத்து 568பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை ஒன்பது இலட்சத்து 15ஆயிரத்து 348பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.