அச்சமின்றி கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும்!


இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய பொறுத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை என்றும் அது சிரமமான விடயம் என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

எனினும் தேவைக்கேற்ப பொறுத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதால் மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.