தரமான தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டு விலையில்!


நாட்டில் தரமான தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டு விலைக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தரமான உள்நாட்டு தேங்காய் எண்ணெய் போத்தலொன்றை 450 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், இந்த வருட இறுதி வரை தரமான, நுகர்வோர் பாவனைக்கு ஏற்ற, சுத்தமான உள்நாட்டு தேங்காய் எண்ணெயை குறித்த விலைக்கு, சதோச மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல கூறினார்.

இதன்படி, வருட இறுதி வரை தேங்காய் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு எந்தவொரு தட்டுப்பாடும் இன்றி 450 ரூபாவுக்கு தேங்காய் எண்ணெயைப் பெற்றுக் கொடுக்க, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நுகர்வோர் பாவனைக்கு பொருத்தமற்ற, இரசாயனங்கள் உள்ளடக்கப்பட்ட 105 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் நாட்டில் இருந்து மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தேங்காய் எண்ணெய் தொகையானது பார்பரா எனும் கப்பல் மூலம் மலேஷியாவுக்கு நேற்றைய தினம் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.