வடக்கு மாகாண கொரோனா நிலைமையை ஆராயும் விசேட கூட்டம்!
வடக்கு மாகாண தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் (P.S.M. Charles) தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர்கள், சுகாதாரப் பிரிவினர், முப்படையினர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
நாளைய கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை