தொற்றாளர்கள் எண்ணிக்கை 96 000 ஐ கடந்தது!


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 7 பேர் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 96 000 ஐ கடந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை 129 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 96 078 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 611 பேர் குணமடைந்துள்ளதோடு , 2852 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மரணங்களின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மேலும் 4 கொரோனா மரணங்களும் , இன்று வெள்ளிக்கிழமை மேலும் 7 கொரோனா மரணங்களும் பதிவாகின.

வியாழனன்று பதிவான மரணங்கள் பன்னிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 12 ஆம் திகதி கொவிட் தொற்று , சிறுநீரக நோய் மற்றும் ஈரல் நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

எல்லக்கல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் மினுவாங்கொட ஆதார வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

கபுலியத்த பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் கடந்த 15 ஆம் திகதி கொவிட் நிமோனியா, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் நிமோனியா, குருதி புற்று நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.