இந்தியாவின் கொரோனா நிலவரம்!


இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 30 இலட்சத்து 57 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 9 இலட்சத்து 79 ஆயிரத்து 519 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 802 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 67 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.